கானக்குயில் - கரோக்கே தமிழீழ எழிற்சிப்பாடற் போட்டி விதிமுறைகள்.


போட்டி விதிமுறைகள்

பாலர், கீழ், மத்திய, மேல் போன்ற பிரிவுகளாகப் போட்டிகள் நடாத்தப்படும்.


பாலர், கீழ் என்ற இரு வகையான போட்டிகளிலும் அதிகூடிய புள்ளிகளைப் பெற்றுக் கொள்ளும் மூவர் தெரிவு செய்யப்பெற்று இளம் கானக்குயில் 2024 விருதுக்கான போட்டி நடைபெறும்.


மத்திய, மேல் என்ற இரு வகையான போட்டிகளிலும் அதிகூடிய புள்ளிகளைப் பெற்றுக் கொள்ளும் மூவர் தெரிவு செய்யப்பெற்று கானக்குயில் 2024 விருதுக்கான போட்டி நடைபெறும்.


ஒரு பிரிவில் கூடுதலான போட்டியாளர்கள் கலந்து கொள்ளும் பட்சத்தில் குழுப்போட்டிகள் இரு பிரிவுகளாக நடாத்தப்படும்.


ஒரே பிரிவில் இருவர் ஒரே பாடலைப் பாட முடியாது. முதலில் விண்ணப்பித்தவருக்கே முன்னுரிமை வழங்கப்படும்.


விண்ணப்பக்கட்டணம் நாற்பது (40) பிராங்குகள். விண்ணப்பக் கட்டணத்தை நிகழ்வு மண்டபத்தில் செலுத்த வேண்டும்.


போட்டியாளர்கள் தமக்குரிய விண்ணப்பங்களை www.kaanakkuyil.com என்ற இணையத்தளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.


போட்டிக்கு விண்ணப்பிக்கும் போது பாடல் வரிகள் கட்டாயம் இணைத்தல் வேண்டும். இணைக்கப்படாத விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.


போட்டியாளர்கள் தங்களது பாடல்களுக்கான கரோக்கி இசையினை 15.02.2024ற்குள் எமக்கு அனுப்பி வைப்பதோடு நிகழ்வு நடைபெறும் அன்றைய தினமும் கொண்டுவருதல் அவசியமானதாகும்.


போட்டியாளர் தெரிவுசெய்யும் பாடல் தமிழீழ எழுச்சிப்பாடலாக அமைதல் வேண்டும்.


தமிழீழ விடுதலைப்புலிகள் வெளியீட்டுப்பிரிவினரால் வெளியிடப்பட்ட பாடல்களைத் தவிர்ந்த ஏனைய இறுவட்டுக்களில் வெளிவந்த தமிழீழ எழுச்சிப் பாடல்களையும் தெரிவுசெய்யலாம். அவ்வாறு தெரிவுசெய்யும் போது அப்பாடல் வரிகளினை முழுமையாக எழுத்துவடிவில் தந்து எமது அனுமதியினையும் பெற்றிருத்தல் வேண்டும்.


போட்டியாளர்கள் இசைத்தட்டில் தாங்கள் பாடிய பாடலை, போட்டியில் பாடுவதற்கு அனுமதிக்கப்படமாட்டாது.


அனைத்து போட்டியாளர்களும் உங்களது அடையாள அட்டையை மண்டபத்திற்கு கொண்டுவந்து உங்கள் வரவை உறுதிப்படுத்துதல் வேண்டும்.


கானக்குயிலுக்கான புதிய வரைமுறைகள்


கானக்குயில் மற்றும் இளம் கானக்குயில் இறுதிப்போட்டிக்கு தெரிவான வெற்றியாளர்கள் 2009க்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியீட்டுப் பிரிவினரால் வெளியிடப்பட்ட தமிழீழ எழுச்சிப்பாடல்களை மட்டுமே தெரிவுசெய்து பாடமுடியும். அப்பாடலானது முழுமையாக பாடப்படவேண்டும். ஆனால் முதலாவதாக பாடிய பாடல் தவிர்த்து இரண்டாவதாக புதிய பாடல் ஒன்றையே பாட வேண்டும். அத்தோடு அவற்றை மண்டபத்தில் முற்கூட்டியே தெரியப்படுத்துவதோடு அதன் கரோக்கி இசையினையும் தருதல் வேண்டும்.


கானக்குயில் மற்றும் இளம்கானக்குயில் 2024 எழுச்சிப்பாடற் போட்டி விருதுக்கான தெரிவானது இறுதிப்போட்டியில் பாடியவர்களது இரண்டு பாடல்களினதும் புள்ளிகளின் அடிப்படையிலேயே முடிவு செய்யப்படும்.


பாடல்கள் பாடப்படும் போது மேலதிகமாக சங்கதிகளை இணைத்து பாடாமல் அதன் அசல் தன்மையோடு பாடுதல் வேண்டும்.


  • நடுவரின் தீர்ப்பே இறுதியானது.

  • விண்ணப்ப முடிவுக்திகதி: 02.02.2024

  • வயதெல்லை


    • பாலர் பிரிவு (2015 அல்லது அதற்குப் பின் பிறந்தவர்கள் )

    • கீழ்ப்பிரிவு ( 2010 - 2014 பிறந்தவர்கள் )

    • மத்தியபிரிவு ( 2005 - 2009 பிறந்தவர்கள் )

    • மேற்பிரிவு ( 2004 அல்லது அதற்கு முன் பிறந்தவர்கள் )